Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மல்லசமுத்திரம், டிச. 23–மங்களம் கிராமத்தில், வேளாண்மை பொறியியல் துறை சார்பில், விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மல்லசமுத்திரம் அடுத்த, மங்களம் கிராமத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின்கீழ், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் நடந்த விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்சிக்கு, உதவிப் பொறியாளர் தங்கராசு தலைமை வகித்தார்.
ஊராட்சி மன்றத் தலைவர் குப்பாயி மாரிமுத்து முன்னிலை வகித்தார். இதில், அரசு மூலம் தரிசு நில தொகுப்பு நிலங்களில் ஆழ்துளை கிணறு அமைத்தல், இக்கிணற்றுக்கு மின்இணைப்பு, சூரியஒளி பம்பு அமைத்தல் குறித்தும், தனிநபருக்கு பண்ணைகுட்டை அமைத்தல், சிறுபாசன குளம், குட்டை, வரத்துவாரி தூர்வாருதல், ஆழப்படுத்துதல், நவீன வேளாண் கருவிகள், இயந்திரங்கள் மானியத்தில் வாங்குதல் குறித்து விவசாயிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.